பொருளாதார சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தியதற்காக மன்மோகன் சிங்குக்கு நாடு கடன்பட்டுள்ளது... நிதின் கட்கரி பாராட்டு

 
இந்த மூன்றை மட்டும் மோடி அரசு செய்தால் போதும்.. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.. மன்மோகன் சிங்

பொருளாதார சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடு கடன்பட்டுள்ளது என்று அவரை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி புகழ்ந்து பேசினார்.

புதுடெல்லியில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது: 1991ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தொடங்கிய பொருளாதார சீர்திருத்தங்கள், அது ஒரு தாாளமய பொருளாதாரத்தை தூண்டியதால் இந்தியாவுக்கு புதிய திசையை அளித்தன. மன்மோகன் சிங் முன்னெடுத்த பொருளாதார சீர்த்திருத்தங்களுக்காக நாடு அவருக்கு கடன்பட்டுள்ளது. 

வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

1990களின்நடுப்பகுதியில் நான் மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்தபோது, முன்னாள் பிரதமரால் தொடங்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக, மாநிலத்தில் சாலைகள் அமைக்க பணம் திரட்ட முடிந்தது. ஏழை மக்களுக்கு அதன் பலன்களை வழங்கும் நோக்கத்துடன் தாராளமய பொருளாதார கொள்கை இந்தியாவுக்கு தேவை. தாராளமய  பொருளாதாரக் கொள்கை விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கானது. 

சாலை அமைக்கும் பணி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் விரைவுப்படுத்த அதிக மூலதன செலவின முதலீடு தேவைப்படும். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக சாமானியர்களிடம் இருந்தும் பணம் திரட்டுகிறது. நாட்டில் 26 புதிய அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சகம் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்மோகன் சிங்கை பா.ஜ.க.வின் நிதின் கட்கரி பாராட்டி பேசியிருப்பது நல்ல அரசியலாக பார்க்கப்படுகிறது.