நாடு முழுவதும் 600க்கும் அதிகமான பயணிகள் ரயில் சேவை ரத்து!!

 
tn

அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விரைந்து அனுப்ப நாடு முழுவதும் 600க்கும் அதிகமான பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

tn

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின்சார வெட்டு ஏற்பட்டு மக்களுக்கு பெரும் இன்னல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதல் நிலக்கரியை ஏற்றி செல்வதற்காக அதிக ரயில் பாதைகளை ஏற்படுத்தும் விதமாக 600 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் சேவையை ரயில்வே துறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலக்கரி தேவையை கருத்தில் கொண்டு  மே 24 வரை 670 பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn

தினந்தோறும்  16  எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நிலக்கரியை கொண்டு செல்லும் ரயில் ரேக்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  ஒரு ரேக்கில் 3 ஆயிரத்து 500 டன் நிலக்கரி வீதம் நாளொன்றுக்கு சுமார் 415 நிலக்கரி ரேக்குகளை வழங்க ரயில்வே துறை  முடிவெடுத்துள்ளது. இருப்பினும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.