ஈபிஎஸ்-ஐ சந்திக்காத மோடி அதிமுக எம்பியை சந்தித்து ஆலோசனை

 
Modi

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில்  பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி புறப்பட்டுசென்றார்.

Modi

டெல்லி பயணத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நாட்டு ஆகியோரை தனியாக சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் யாரையும் தனியாமல் சந்திக்காமல் அவர் திரும்பி வந்தார். 

அண்மையில் டெல்லி வந்து முகாமிட்டிருந்த அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பார்க்க நேரம் ஒதுக்காத நிலையில் அதிமுக மாநிலங்களவை எம்.பி. தம்பித்துரை பிரதமரை சந்தித்துள்ளார். அப்போது குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு  வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பதவியேற்றதற்கு மாநிலங்களவை எம்பி தம்பித்துரை மோடியிடம் வாழ்த்து தெரிவித்தார். அ.தி.மு.க வில் தற்போது உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியை பார்க தவிர்த்த பிரதமர் தம்பித்துரையை மட்டும் பார்த்தது ஏன்? என பல்வேறு சர்ச்சை எழுந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்கு சென்னை செல்லும் போது எடப்பாடி பழனிச்சாமியை பார்க நேரம் ஒதுக்கும் படி தம்பிதுரை மோடியிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.