மாயமான மனைவி - ஹெலிகாப்டர் மூலம் தேடிய கணவன் ; காத்திருந்த அதிர்ச்சி!

 
tn

இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட  கணவனுடன் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்று காதலனுடன் இளம்பெண் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சீனிவாஸ்.  இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதி தங்களது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கடந்த ஜூலை 25ஆம் தேதி கொண்டாடியுள்ளனர்.  இதற்காக விசாகப்பட்டினம் கடற்கரைக்கு இருவரும் சென்றதாக தெரிகிறது.  கடலில் இருவரும் தம்பதியாக செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது சீனிவாஸுக்கு போன் கொண்டு வந்துள்ளது.  இதனால் போனை எடுத்துக் கொண்ட அவர்சிறிது தூரம் சென்று பேசியுள்ளார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. இதனால் அவர் அலையில் இழுத்து செல்லப்பட்டாரோ  என்று பயந்து போலீசாரின் உதவியை நாடியுள்ளார்.

tn

 இதை தொடர்ந்து இரண்டு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் அதிகாரிகள் காணாமல் போன பெண்ணை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.  இருப்பினும் அவர் குறித்து எந்த தகவலும் தெரியடவில்லை.  சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டதாக கருதப்பட்ட பிரியா தனது காதலனுடன் நெல்லூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடலில் காணாமல் போன மனைவி.. கதறிய கணவன்.. 1 கோடி செலவு செய்த மீட்புப்படை..கடைசியில் தெரியவந்த அதிர்ச்சி!

திருமணத்திற்கு முன் ரவி என்பவரை காதலித்து வந்ததாகவும்,  திருமண முடிந்த பின்னரும் இருவரும் தொடர்ந்து பழகி வந்ததாகவும் தெரிகிறது.  எனவே காதலர் அழைத்ததால்  அவரோடு சென்று விட்டதாக கூறப்படுகிறது. கடலில் இழுத்துச் செல்லப்பட்டதாக கருதப்பட்ட பிரியாவை தேடுவதற்காக மீட்பு படை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.