ராணி எலிசபெத்தின் மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல்!!

 
tn

இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், பிரான்ஸ் மன்னருக்கு அடுத்து ஒரு அரசை அதிக காலம் (70 ஆண்டுகள்) ஆட்சி செய்தவர் என்ற பெருமையுடன் விடைபெற்றார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.

Queen Elizabeth II

ராணி எலிசபெத்தின் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, மகாராணி இரண்டாம் எலிசபெத் நம்முடைய காலத்தின் உறுதியானவராக நினைவுகூரப்படுவார். அவர் தன்னுடைய தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தையும் நேர்மையையும் வெளிப்படுத்தினார். அவருடைய மறைவால் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும் இங்கிலாந்து மக்களுடனும் உள்ளன.

Prince Charles Queen Elizabeth II

2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு என்னுடைய இங்கிலாந்து பயணத்தின்போது மகாராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். அந்த சைகையை நான் எப்போதும் போற்றுவேன்" என்று பதிவிட்டுள்ளார். பிரிட்டன் ராணி மறைவு செய்தி எதிரொலியாக பக்கிங்காம் அரண்மனை முன் குவிய தொடங்கிய மக்கள்,  அரண்மனை வாயிலில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Queen Elizabeth

அத்துடன் பிரிட்டன் ராணி மறைவை தொடர்ந்து இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையே நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!