மோடி அதை செய்திருப்பார் என்று நான் நம்பவில்லை.. மம்தா பானர்ஜியின் ஆச்சரியமான பேச்சு

 
மோடி

புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தியதன் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பார் என்று நான் நம்பவில்லை என மம்தா பானர்ஜி மேற்கு வங்க சட்டபேரவையில் பேசியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்க சட்டப்பேரவையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகப்படியான செயல்களுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்தார். அதன் பிறகு மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.க்கு பயந்தும், தவறாக பயன்படுத்தப்படுவதாலும் அவர்கள் ஓடுகிறார்கள். மோடி இதை செய்யவில்லை என்று நான் நம்புகிறேன். சி.பி.ஐ. எப்போதும் பிரதமர் அலுவலகத்திற்கு  அறிக்கை அளிக்காது என்பது உங்களில் பலருக்கு தெரியாது.  

மம்தா பானர்ஜி

இது (சி.பி.ஐ.) உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கிறது. சில பா.ஜ.க. தலைவர்கள் சதி செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி நிஜாம் அரண்மனைக்கு செல்கிறார்கள். தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கிறது. இந்த தீர்மானம் குறிப்பாக யாருக்கும் எதிரானது அல்ல. மாறாக மத்திய அமைப்புகளின் பாரபட்சமான செயல்பாட்டிற்கு எதிரானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து ஆதிகாரி பேசுகையில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளுக்க எதிரான தீர்மானம் பேரவையின் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு  எதிரானது என்று தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம்

இருப்பினும், மேற்கு வங்க சட்டப்பேரவையில் அந்த தீர்மானத்துக்கு எதிராக 69 பேர் மட்டுமே வாக்களித்தனர் அதேசமயம் ஆதரவாக 189 பேர் வாக்களித்ததால் அந்த தீர்மானம் நிறைவேறியது. மோடியை கடுமையாக தாக்கி வந்த மம்தா பானர்ஜி தற்போது, பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தியதன் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பார் என்று நான் நம்பவில்லை என மம்தா பானர்ஜி பேசியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.