காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி மறைவு - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல்

 
Om Birla

காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை  பயணத்தில்  பங்கேற்ற எம்.பி. சந்தோக் சிங் சவுத்ரி உயிரிழந்தார். இன்று காலை பஞ்சாப் லூதியானாவில் நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்றபோது அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி.சந்தோக் சிங் சவுத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாப் பில்லூர் பகுதியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்ற  நிலையில் இந்த எதிர்பாராத துயர சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக ஒற்றுமைப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  சந்தோக் சிங் சவுத்ரி பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி எம்பி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தோக் சிங் சவுத்ரி எம்.பியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். "எங்கள் எம்.பி., சந்தோக் சிங் சவுத்ரியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்..," என்று அவர் டுவீட் செய்துள்ளார்.