ரூ.200 கோடி மோசடி வழக்கு- பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு ஜாமீன்

 
jacqueline

சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டே தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ரூ.200 கோடி மோசடி வழக்கு.. பிரபல பாலிவுட் நடிகைக்கு ஜாமீன் நீட்டிப்பு..!! -  Cinemamedai

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்கத்துறை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடைந்த என குறிப்பிட்டு இருந்தது. இது தொடர்பாக ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணை நடத்திய போது முதலில் சுகேஷ் சந்திரசேகர் தன்னை தனியார் தொலைக்காட்சியின் ( சன் டிவி ) நிறுவனர் எனவும் , பழைமை வாய்ந்த அரசியல் தலைவர்கள் குடும்பத்திலிருந்து வந்தவன் எனவும் அறிமுகம் படுத்திக் கொண்டதாகவும் அதற்குப் பிறகு மினி கூப்பர் கார் , விலை உயர்ந்த கடிகாரங்கள், ஹேண்ட் பேக், காலணிகள், பூச்செண்டுகள் உள்ளிட்ட 7 கோடி ரூபாய் பொருட்கள் பரிசளித்ததாகவும் விசாரணையின் போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்திருந்தார். 

இதனிடையே ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமீன் கோரிய வழக்கு செப்டம்பர் 26ம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கோரிக்கையை ஏற்று 50,000 பிணைத்தொகையுடன் இடைக்கால ஜாமினை வழங்கினார். மேலும் இவ்வழக்கில் அமலாக்க துறையினருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்.  இந்நிலையில், மீண்டும் இவ்வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக தொடர் விசாரணையாக செய்யப்பட்ட நிலையில், இன்று ஜாக்குலின் பெர்னான்டஸ்-க்கு பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், 2 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என கூறி நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார்.

...