ரகசிய இடத்தில் வைத்து விசாரணை! முக்கிய புள்ளிகளுக்கு பெண்களை அனுப்பிய சாண்ட்ரோ ரவி வாக்குமூலம்!
முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பெண்களை அனுப்பி விபச்சார தொழில் செய்து வந்த மைசூரை சேர்ந்த புரோக்கர் சான்ட்ரோ ரவி குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் கடந்த 13ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி சான்ட்ரோ ரவியிடம் வாக்குமூலம் வாங்கி வருகின்றனர் சிஐடி போலீசார்.
கர்நாடக மாநிலத்தில் மைசூர் விஜய நகரை சேர்ந்த 40 வயது உள்ள நடுத்தர வயது பெண் தன் கணவர் மஞ்சுநாத் என்கிற சான்ட்ரோ ரவி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உயிரைக் கொல்லும் நோயை பரப்பி வரதட்சனை கொடுமையும் செய்வதாக கடந்த நாலாம் தேதி அன்று விஜயநகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதும் சாண்ட்ரோ ரவி தலைமறைவானார். பின்னர் போலீசாரின் விசாரணையில் தான் சான்ட்ரோ ரவியின் உண்மை முகம் தெரிய வந்தது. அரசியல் முக்கிய புள்ளிகள், உயரதிகாரிகள், செல்வாக்கு மிக்க தலைவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெண்களை வரைவழைத்து விபச்சாரத் தொழில் நடத்தி வந்திருக்கிறார் என்கிற அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரபல கார்களின் பெயரை சூட்டி வாடிக்கையாளர்களிடம் லட்சக் கணக்கில் பணம் கறந்திருக்கிறார் என்பதும், பல பெண்களை வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளி வந்ததும் தெரிய வந்தது.
கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மகன் உட்பட பல்வேறு முக்கிய அரசியல் புள்ளிகளுடன் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக நாடகமாடி இருப்பதும் தெரிய வந்தது. இந்த செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டுதான் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து பணம் பறித்திருக்கிறார். சம்பாதித்த பணத்தில் விலை உயர்ந்த கார்களையும் வாங்கி குவித்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து இந்த வழக்கின் தீவிரம் அறிந்து போலீசார் அவரை பிடிக்க ராம் நகர், மாண்டியா, மைசூர், ராயச்சூர் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் மூன்று சிறப்பு படைகள் அமைத்தார்கள். கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சான்ட்ரோ ரவியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் சாண்ட்ரோ ரவி பதுங்கி இருப்பது தெரியவந்தது. ரவியும் அவரது கூட்டாளிகள் ராம்ஜி, சதீஷ், மதுசூதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ரவியின் கூட்டாளி சேத்தன் கடந்த 12ஆம் தேதி அன்று மந்த்ராலயா கோவிலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் குஜராத் போலீஸ் உதவியுடன் அகமதாபாத்தில் பதுங்கி இருந்த ரவியையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக செயற்கை முடியை எடுத்துவிட்டு, மீசையை எடுத்து விட்டு உலவி வந்திருக்கிறார் ரவி.
ரவி மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 28 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன என்பதும், கிரிமினல் வழக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து வந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது தற்போதைய விசாரணையில். ரவிக்கு உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் ரவியிடம் நடத்திய ரகசியம் விசாரணையில் பிரவீன் குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 2008 ஆம் ஆண்டில் சப்-இன்ஸ்பெக்டர் ஆக வேலைக்கு சேர்ந்தவர் பிரவீன். இன்ஸ்பெக்டர் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தபோது ரவுடிகள் மூலம் லஞ்சம் வசூலித்து வந்திருக்கிறார். சம்பங்கி ராம் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது ஒரு ரவுடிகள் மூலம் வசூல் வேட்டை நடத்தி வந்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண்ணுடன் பிரவீனுக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. திருமணம் செய்து கொள்வதாக சொல்லி உல்லாசம் அனுபவித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு அந்த இளம் பெண் உயர் போலிஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்க முயன்றும் அதை தடுத்திருக்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் பிரவீனுக்கு ரவியின் பழக்கம் கிடைத்திருக்கிறது. காட்டன் பேட்டை காவல் நிலையத்தில் இருந்து இடமாற்றம் கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு அரசியல் பிரமுகர்களை நன்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறார் ரவி. அந்த பழக்கத்தில் ரவி கொடுத்த பொய் புகாரில் தான் இரண்டாவது மனைவியின் மீது பிரவீன் பொய் வழக்கு பதிவு செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.