இன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..

 
இன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. 


இந்தியாவின் முதல் தனியார்  ராக்கெட் விக்ரம்-எஸ் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை  தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்கிற நிறுவனம் 'விக்ரம்-எஸ்' என்ற  ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட முதல் தனியார்  ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டானது இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஏவுகிறது.

இன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. 

 முழுமையாக தனியார் தயாரித்த இந்த ராக்கெட்  83 கிலோ எடையை தூக்கி செல்கிறது.  விக்ரம்-எஸ்  ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது.  மேலும்,  7 டன் உந்து சக்தியை கொண்டது. இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில்   நிலை நிறுத்தப்படுகிறது. பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு இவை பயன்படுத்தப்படுவதாக  இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.