இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்தை கடந்தது கொரோனா!!

இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா தொற்று 3ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 3,157 பேருக்கும், நேற்று 2,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . தற்போது மீண்டும் கொரோனா தினசரி தொற்றானது 3ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 88 ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 31 பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,23, 920 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 44,689 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில்19,509 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இந்தியாவில் மேலும் 4,79,208 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 189. 48 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.