இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா!!

 
corona

இந்தியாவில் இதுவரை 189. 41 கோடி டோஸ்  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

corona

 கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் 3,324  பேருக்கும், நேற்று  3,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .  தற்போது மேலும் கொரோனா தினசரி தொற்றானது  3ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 84 ஆயிரத்து 913 ஆக அதிகரித்துள்ளது. 

india corona

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 20 பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் ஏற்பட்ட  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,23, 889 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 41, 887ஆக உயர்ந்துள்ளது.  தற்போது வரை இந்தியாவில் 19,137 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இந்தியாவில் மேலும் 16,23,765 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 189. 41 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.