சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு - அதிகரித்த உயிரிழப்பு

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு குறைவாக பதிவாகி வந்த நிலையில், நேற்று முன் தினம் 20 ஆயிரத்தை தாண்டியுது. நேற்று  முன் தினம் 20,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதேபோல் நேற்று 20,409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நேற்றைய பாதிப்பை விட ஒரு நபருக்கு குறைவாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 20,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 99 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  ஒரேநாளில்  54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை தொற்றால்  பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,312 ஆக அதிகரித்துள்ளது.

corona

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா பாதித்த 20,958 பேர் குணமடைந்த நிலையில்,   கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை  4.33 கோடியை தாண்டியுள்ளது. தற்போது வரை இந்தியாவில்  1,43,384 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 33 லட்சத்து 87 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 203 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 5.05% ஆக உள்ளது.