மீண்டும் 20,000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 3 நாட்களை விட கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு குறைவாக பதிவாகி வந்த நிலையில், இன்று 20 ஆயிரத்தை தாண்டியுள்ளாது. நேற்று
18,313 பேருக்கும், நேற்று முன் தினம் 14,830 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 20,557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4, 39, 59,321 ஆக உள்ளது. ஒரேநாளில் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,211 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4.32 கோடியை தாண்டியுள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1,46,323 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 202.90 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 4.31% ஆகவு பதிவாகி வருகிறது.