நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,809 பேருக்கு கொரோனா

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட சற்று குறைந்துள்ளது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த நில நாட்களாக குறைந்து வந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்தது. நேற்று 7,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 6,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,44,49,726 லிருந்து 4,44,56,535 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 26 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,27,991 ஆக அதிகரித்துள்ளது.  

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,414 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,73,430 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது  55,114 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் நாட்டில்  19,35,814 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 213 கோடியே 20 லட்சமாக அதிகரித்துள்ளது.