இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,395 பேருக்கு கொரோனா

 
india corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. வருகிறது. நேற்று முன் தினம் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு  4 ஆயிரத்து 417 ஆக குறைந்தது. இதனிடையே நேற்று 5,379 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 6,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  4,44,78,636 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 33 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,090 ஆக அதிகரித்துள்ளது.  

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,614 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,00,204  ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது  50,342 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் நாட்டில்  36,31,977 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 2,14,27,81,911ஆக அதிகரித்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 3,25,602 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,83,94,283 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.