இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,298 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட சற்று குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று அதிகரித்தது. நேற்று முன் தினம் 5,108 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று 6,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 6,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,45,22,774 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 23 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,273 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 916 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 47ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 46,748 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் நேற்று ஒரே நாளில் 19,61, 896 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 216.17 கோடியாக அதிகரித்துள்ளது.