இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,093 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. நேற்று முன் தினம் 5,379 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 6,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 6,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,44,84,729 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 31 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,121 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6768 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,06,972 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 49,636 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் நாட்டில் 28.09 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 214 கோடியாக அதிகரித்துள்ளது.