நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,076 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களை விட குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் 6,093 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 5,554 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,44,95,359 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,150 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,322 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,19 ,264 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 47,945 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் நாட்டில் 17.81 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 215 கோடியை நெருங்கியுள்ளது.