200 கோடி டோஸ் தடுப்பூசி - புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா

 
vaccine

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது 200 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 
 
கொரோனாவிற்கு எதிரான போரில் பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி இந்தியாவில் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா முதல் அலையின் போது கொரோனா பலி அதிகமாக இருந்த நிலையில், தடுப்பூசியின் காரணமாக அடுத்த இரண்டு அலைகளில் பலி எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனிடையே தற்போது நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இநிலையில், நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது 200 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: இந்தியாவில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியை கடந்திருப்பது நமக்கு பெருமைக்குரிய விசயம். இந்த சாதனைக்காக சுகாதார நல பணியாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு பாராட்டுதல்களை நான் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதன்படி மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களில் 98 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோசும், 90 சதவீதம் பேர் முழு அளவிலும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,528  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.