#BREAKING காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

 
gulam nabi azad

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசிய விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தை ஜம்மு-காஷீர் பிரசார  குழு தலைவராக கட்சியின் தலைமை நியமித்தது.கட்சித் தலைமை அறிவித்த சில மணிநேரத்தில் தனது தலைவர் மற்றும் மாநில விவகாரக் குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். இந்த தகவலை ANI செய்தி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.