இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயல் நியமனம்..

 
இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயல் நியமனம்..

இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.   குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.  

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக தற்போது  ராஜீவ் குமார் இருந்து வருகிறார்.  அவருக்கு அடுத்ததாக தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை,  மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்திருக்கிறது.  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இவரது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.    

இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயல் நியமனம்..

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல், கடந்த 1985ம் ஆண்டு  பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்துவந்த இவர், அண்மையில் விஆர்எஸ் பெற்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். விரைவில், குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது.  அத்துடன்  அடுத்த மாதம் 2 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும்  வெளியிடப்பட இருக்கின்றன. 

இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து  கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.  குறிப்பாக , 2024ம் ஆண்டு நாடே எதிர்பாக்கும் மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.  இத்தகைய சூழலில்,  அருண் கோயலின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.