6 மாத நாய்க்குட்டிக்கு பாலியல் தொல்லை - உணவு டெலிவரி பாய் கைது

 
dog

மும்பையில் 6 மாத நாய்க்குட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உணவு டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்தனர். 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து வரும் நமது நாட்டில், சில காமக்கொடூரர்கள் வளர்ப்பு பிராணிகளையும் விட்டு வைப்பதில்லை.
கடந்த சில நாட்களாக வளர்ப்பு பிராணிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, பவாய் பகுதியில் 6 மாத நாய்க்குட்டிக்கு, இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவாய் ஹிரா பென்னா என்ற வணிக வளாகத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு உணவகத்தின் ஊழியர்கள் ஆறு மாத  நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்த உணவகத்திற்கு வந்து செல்லும் உணவு டெலிவரி ஊழியர் ஆகாஷ் என்பவர் அந்த நாய்க்குட்டியை பால்கனிக்கு கூட்டிச்சென்று பாலியல் கொல்லை கொடுத்துள்ளார். இதனை அவரது சக ஊழியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இந்த வீடியோ விலங்குகள் நல ஆர்வலர் விஜய் மோஹானிக்கு சென்ற நிலையில், அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆகாஷை கைது செய்தனர். விசாரனையில் ஆகாஷ் அந்த நாய்க்குட்டிக்கு பலமுறை பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்துள்ளது.