#BREAKING: டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் வீதிகளில் தஞ்சம்

 
earth

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டத்தால் மக்கள் பீதியடைந்தனர். 

தலைநகர் டெல்லியில் இன்று பிற்பகலில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில்  5.8 ஆக பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்த நிலநடுக்கம் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 வினாடிகள் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் பாதிப்பு உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 நிலநடுக்கம் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் கட்டங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.