வருகிற 21ம் தேதி ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

 
sonia

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ம் தேதி ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவியது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இந்த பத்திரிக்கையின் பங்குகளை ,   சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு  பங்குதாரர்களின் ஒப்புதலை  பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து. இதனையடுத்து  சோனிய மற்றும் ராகுல் காந்தி மீது  பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி,   டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை. இதனையடுத்து சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று வழக்கு விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியது. இதனிடையே ராகுல் காந்தி 5 நாட்கள் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் சுமார் 50 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் வருகிற ஜூலை 21ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்குத்துறை சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சோனியா காந்தியில் உடல்நிலை சரியானதை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.