குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்பு!!

 
draupadi

இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்கிறார். காலை 10.15 மணியளவில் நடைபெறும் விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.  

Droupadi Murmu  - Narendra Modi

நாடாளுமன்றம் மைய வளாகத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகளாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் . 21 குண்டுகள் முழங்க பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.  நிகழ்ச்சி முடிந்தவுடன் நாட்டு மக்களிடையே திரவுபதி முர்மு உரையாற்றுவார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Draupadi Murmu 1
இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா , மத்திய அமைச்சர்கள் ,ஆளுநர்கள் ,மாநில முதல்வர்கள் ,மக்களவை எம்பிக்கள் , முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் . பதவி ஏற்பு விழா முடிந்ததும் குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்லும் திரவுபதி முர்முவுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.