#BREAKING: நாட்டின் புதிய குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்பு

 
murmu

நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். 

இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிலையில், இதில்  பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அதிக வாக்குகள் பெற்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வெற்றிவாகை சூடினார்.  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 5.77 லட்சம் வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா - 2.61 லட்சம் வாக்குகளும் பெற்றுளனர். திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். இதனையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.  

murmu

இதனை முன்னிட்டு முப்படைகள் புடைசூழ திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்க்கு மரியாதை அளிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் குடியரசு துணை தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம்.பிர்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள், மூத்த தளபதிகள், பிற துறை தலைவா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.