டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம் - அரசு பங்கு பத்திர பரிமாற்றத்திற்கு பயன்படுத்தலாம்

 
ட்

 டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது என்று அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

 நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அதன்படி இன்று  டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. 

 நாம் பயன்படுத்தும் பணம் காகித வடிவத்திலும்,  உலோக நாணய வடிவத்திலும் இருக்கின்றன.  இதே போல் டிஜிட்டல் கோட் பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படுகிறது.   தனியார் துறையினரும் இதை வெளியிடுகின்றார்கள் . 

ர்

காகித பணத்திற்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது .    ஒரு சில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்து இருக்கின்றன.  இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை இன்று வெளியிடுகிறது . பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, ஹெச்டிஎஃப்சி ,கோடக் மகேந்திரா வங்கி, ஐ சி ஐ சி ஐ, ,  எஸ் வங்கி எச் எஸ் பி சி,  பஸ்ட் வங்கி,  எச் டி எஃப் சி ஆகிய 9 வங்கிகள் மூலமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது . 

சோதனை அடிப்படையில் இந்த கரன்சியை தற்போது வெளியிடப்படுகிறது.  இன்னும் ஒரு மாத ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.   அந்த கரன்சியை வாடிக்கையாளர்கள் வியாபாரிகள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு டிஜிட்டல் ரூபாய் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது .   இந்த பரிமாற்றத்தில் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து இதர பரிமாற்றங்களுக்கும் இந்த கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று கூறி இருக்கிறது ரிசர்வ் வங்கி.