எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு - உச்சநீதிமன்றம் போட்ட தடை

 
எ

 கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதித்துள்ளது.  அதே நேரம் இது குறித்து எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

சு

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா.   இவர் ஆட்சியில் இருந்தபோது பல ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக டி -நோட்டிபிகேஷன் செய்தார் என்று ஊழல் வழக்கு பதிவானது.   இராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நிறுவனத்திற்கு பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எடியூரப்பா மற்றும் அவரது மகன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 இந்த ஊழல் குற்றச்சாட்டின் கீழ் எடியூரப்பா மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்தது.   கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அன்று எடியூரப்பாவின் ஊழல் குற்றச்சாட்டு வழக்கினை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டது கர்நாடக உயர் நீதிமன்றம்.  இதை அடுத்து எடியூரப்பா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.   இந்த மனு மீதான விசாரணைக்கு பின்னர் உச்ச நீதிமன்றம் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.   எடியூரப்பா தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியதுடன்,  கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்துள்ளது.