திருவிழாவுக்கு வந்த இரண்டு யானைகளுக்குள் மோதல்- வைரல் வீடியோ

 
elephant

கேரளாவில் திருவிழாவுக்கு வந்த இரண்டு யானைகளுக்குள் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கிழக்கஞ்சேரி பகுதியில் உள்ள சிவன் கோவில் திருவிழாவுக்காக மூன்று யானைகள் வந்திருந்தன. திருவிழா துவங்குவதற்கு முன்பாக யானைகளுக்கு நெற்றி பட்டம் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திடீரென்று இரண்டு யானைகளுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது திருவிழாவுக்கு வந்திருந்த மக்கள் சிதறி ஓடினார்கள். மேலும் அவர்களது இரு சக்கர வாகனங்கள் யானைகள் துவசம் செய்தது.

இதில் ஆறு இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானைகளை சமாதானம் செய்து கட்டி வைக்கப்பட்டது. இரண்டு யானைகளுக்குள் மோதல் ஏற்பட்டு சண்டையிடும் காட்சிகள் இங்கிருந்து மக்களால் செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.