1500 வாத்துகள் இறப்பு; 20 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு -கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல்

 
கெ

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் 20 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் ஆழப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன.   இதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூனாவது முறையாக பறவை பார்க்க காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது .  கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துகள் திடீரென்று இறந்தன.   கால்நடை பராமரிப்பு துறையில் இறந்து போன வாத்துக்களின் மாதிரிகளை சேகரித்து போபால் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

வா

 பரிசோதனை முடிவில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை அடுத்து ஆலப்புழா மாவட்டத்தில்  நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து பறவை காய்ச்சல் வேறு இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 கடந்த வாரத்தில் 1500 வாத்துகள் உயிரிழந்த நிலையில் 20 ஆயிரம் கோடிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.   கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏழு பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றையும் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.