#BREAKING ; திரிபுரா, நாகலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

 
election commision

திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சமீபத்தில் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது அடுத்த கட்டமாக மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.  மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22ஆம் தேதியும், நாகாலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும் சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முடிகிறது. இதனையடுத்து மூன்று மாநிலங்களுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திரிபுரா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 16ம் தேதி நடைபெறவுள்ளது. நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலத்திற்கான தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.