ஞானவாபி மசூதி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு... வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ன் நோக்கம் தோல்வியடையும் .. அசாதுதீன் ஓவைசி

 
ஞானவாபி மசூதி

ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, இந்த உத்தரவுக்கு பிறகு  வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ன் நோக்கம் தோல்வியடையும் என அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதிகோரி, 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து ஞானவாபி மசூதியை கள ஆய்வு செய்ய வாரணாசி மாவட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டது.  நீதிமன்றத்தின் உத்தரவுபடி களவு ஆய்வு செய்தபோது மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதேசமயம் மசூதி வளாகத்தை களஆய்வு செய்ய அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

இதற்கிடையே, ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில், நேற்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: இந்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

ஞானவாபி மசூதி பகுதியில் போலீஸ் குவிப்பு

இந்த உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி மேல்முறையீடு செய்யும் என நம்புகிறேன். இந்த உத்தரவுக்கு பிறகு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ன் நோக்கம் தோல்வியடையும் என்று நான் நம்புகிறேன். இதற்கு பிறகு ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் விளைவு தொடங்கும். பாபர் மசூதியின் பிரச்சினையின் பாதையில் நாம் செல்கிறோம். பாபர் மசூதி மீதான தீர்ப்பு வழங்கப்பட்டபோது, இந்த தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டதால்  இது நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கும் என்று நான் அனைவரையும் எச்சரித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.