சில தீவிரவாத அமைப்புகள் மதத்தின் பெயரால் கலவரத்தையும், மோதலையும் உருவாக்கி வருகிறது.. அஜித் தோவல்

 
காஷ்மீரில் கடந்த ஒரு மாசத்துல ஒரு குண்டு கூட சுடப்படவில்லை… அஜித் தோவல் தகவல்

சில தீவிரவாத அமைப்புகள் மதத்தின் பெயரால் கலவரத்தையும், மோதலையும் உருவாக்கி வருகிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று சூபி மதகுருக்களுடன் சர்வமத நல்லிணக்க சந்திப்பை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நடத்தினார். நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கான பிரதமர் மோடியின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் அஜித் தோவல் பேசுகையில் கூறியதாவது: சில தீவிரவாத அமைப்புகள் மதத்தின் பெயரால் கலவரத்தையும், மோதலையும் உருவாக்கி வருகிறது, இது நாட்டை பாதிக்கிறது. உலகில் மோதல் சூழ்நிலை நிலவுகிறது, அந்த சூழ்நிலையை நாம் சமாளிக்க வேண்டுமானால் நாட்டின் ஒற்றுமையை ஒன்றாக பேணுவது முக்கியம். 

ஹஸ்ரத் நஜருதீன் சிஷ்டி

இந்தியா முன்னேறும் விதம் அனைத்து மதத்தினரும் பயன்பெறுவர். சில கூறுகள் இந்தியாவின் முன்னேற்றத் கெடுக்கும் சூழலை உருவாக்க முயற்சிக்கிறது. அவர்கள் (தீய சக்திகள்) மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரில் வன்முறை மற்றும் மோதலை உருவாக்குகிறார்கள். இது முழு நாட்டையும் பாதிக்கிறது, அதே நேரத்தில் நாட்டிற்கு வெளியேயும் பரவுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பிரிவினரும் நாம் ஒன்றாக ஒரு நாடு என்று உணர வேண்டும், அதில் நாம் பெருமைப்படுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பி.எப்.ஐ.

இந்த கூட்டத்தில் அகில இந்திய சூபி சஜ்ஜதனாஷின் கவுன்சிலின் தலைவர் ஹஸ்ரத் நஜருதீன் சிஷ்டி பேசுகையில், ஒரு சம்பவம் நடந்தால் கண்டிக்கிறோம் ஆனால் ஏதாவது செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்தவும், தடை செய்யவும் இந்த நேரத்தின் தேவை. அது எந்த தீவிரவாத அமைப்பாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஆதாரம் இருந்தால் தடை செய்யப்பட வேண்டும். பி.எப்.ஐ.க்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால், அதை தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தின் இறுதியியில், தேச விரோத செயல்களில் ஈடுபடும் மற்றும் குடிமக்களிடையே முரண்பாடுகளை உருவாக்கும் பி.எப்.ஐ. போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.