81 வயது மாமியாரை தாக்கிய மருமகள்.மாட்டிவிட்ட வீடியோ!
விசாரணையில் சாந்தாபாய் தன்னை, தன் மருமகள் காந்தா தேவி பலமுறை கொடூரமான முறையில் தாக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார். அது தவிர அந்த பள்ளி மாணவி எடுத்த வீடியோ ஆதாரமும் இருக்கிறது
மாமியாரை முடியை பிடித்து இழுத்து அடித்த மருமகளின் கொடூர செயலை ஒரு பள்ளி மாணவி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததால் எஸ்கேப் ஆன மருமகளைத் தேடி வருகிறது ஹரியானா போலீஸ.
ஹரியானா மாநிலத்தின் மஹெந்திரகார் மாவட்டம் நார்னெல் அருகில் உள்ளது நிவாஸ்நகர் கிராமம்.அந்த கிராமத்தை சேர்ந்த காந்தா தேவி என்கிற பெண் , சாந்த பாய் என்கிற தனது 81 வயது மாமியாரை முடியை பிடித்து இழுத்து கடுமையாகத் தாக்குவதைப் பார்த்த ஒரு பள்ளி மாணவி அந்தக் காட்சிகளைத் தன் செல்போனில் படமெடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, நார்னெல் துணை கண்காணிப்பாளர் வினோத் குமார், சில பெண் அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.அந்த விசாரணையில் சாந்தாபாய் தன்னை, தன் மருமகள் காந்தா தேவி பலமுறை கொடூரமான முறையில் தாக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார். அது தவிர அந்த பள்ளி மாணவி எடுத்த வீடியோ ஆதாரமும் இருக்கிறது.
Dear @mlkhattar
This video clip is from Niwaj Nagar village in the subdivision Narnaul of the Mahendragarh District in Haryana filmed by neighbours.This old woman is a proud Ex member of INA and get Rs 30000/- Govt pension who is regularly beaten by her Daughter in law.
Pls help pic.twitter.com/hJLJoMh2hc— Rishi Bagree ?? (@rishibagree) June 7, 2019
தாக்குதலுக்கு உள்ளான சாந்த பாய்க்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது. அந்த அறிக்கைக்காகத்தான் காத்திருக்கிறோம்.அது வந்த உடன் காந்தா தேவிமீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வினோத் குமார் தெரிவிக்கிறார் .
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்,காந்தா தேவியின் கணவரும் பிள்ளைகளும் வெளியே போன உடன் காந்தா தேவி தனது மாமியாரை மிகவும் மோசமான முறையில் நடத்துவார், சில நேரங்களில் மாமியாரை அடிக்கவும் செய்வார் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நிலையில்,சில தினங்களுக்கு முன்பு வீட்டு வாசலில் வைத்து சாந்த தேவியை அவரது மருமகள் சரமாரியாக தாக்குவதை அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாகிவிட்டது.
அதைத் தொடர்ந்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரின் உத்திரவின் பேரில் நார்நெல் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தா தேவியை தேடி வருகிறார்கள்