கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய சென்ற 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி..

 
கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய சென்ற 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி..

மகாராஷ்டிராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  

மகாராஷ்டிரா  மாநிலம் பர்பானி மாவட்டத்தில்  உள்ள ஒரு பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 6 தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.  திடீரென அவர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.  இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,  5 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், ஒரு தொழிலாளி கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய சென்ற 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி..

சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.  இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக  சோன்பெத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.