பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்து - 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 
accident

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் கோதுமை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று உததாகரன் பஞ்சாயத்து அருகே சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையோரத்தில் இருந்த 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த லாரி பலத்த சேதத்திற்குள்ளான நிலையில் அதில் பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் லாரியில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.    

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சுனில் காந்த், அவரது மனைவி சீதா தேவி, மகள் த்ரிஷா தேவி, ஆர்த்தி மற்றும் மிலாப் சந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் தாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.