கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய ரூ.20 லட்சம்! மனைவியின் மாஸ்டர் பிளான்

திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு தடையாக இருக்கும் கணவரை ரூ.20 லட்சம் கொடுத்து கொலை செய்ய திட்டம் வகுத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் முடிகொண்டா மண்டலத்தில் உள்ள சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த தோட்டா தர்மா ராவ் என்பவரின் மனைவி சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் டிரைவராக இருக்கும் ராமாஞ்சனேயலுவிடம் பழக்கம் ஏற்பட்டு திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இந்த விவகாரம் தர்மாவுக்கு தெரிந்ததால் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவு செய்து தனது காதலன் ராமாஞ்சனேயலுவிற்கு தனது திட்டத்தை கூறினார்.
இதனையடுத்து ராமாஞ்சனேயலு பருகுடேம் கிராமத்தைச் சேர்ந்த தண்ட வெங்கட நாராயணாவை என்கிற வெங்கட்டை தொடர்பு கொண்டு கொலை குறித்து விளக்கினார். வெங்கட் தனது நண்பரான ரவுடி விஜயகுமாரை அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து கொலைக்கு ரூ.20 லட்சம் வழங்க தர்மா மனைவி ஒப்பு கொண்டு முன் தவனையாக ரூ.5 லட்சம் தனது காதலன் ராமாஞ்சனேயலு மூலம் கொடுத்தார். இதனையடுத்து தர்மாவை மார்ச் 12 ஆம் தேதி கம்மம் நகரின் தன்சலபுரம் அருகே கடத்தி கொலை செய்வதற்கு முன்பு மீதமுள்ள பணத்திற்காக ராமஞ்சநேயாவைத் தொடர்பு கொண்டனர். ஆனால் ராமாஞ்சனேயலு பதில் சொல்லாமல் போனை சுவிட்ச் ஆப் செய்ததால் தர்மாவை கடத்தியவர்கள் அவரை மிரட்டி 1,50,000 பணத்தை ஜீபே செய்து கொண்டு அவரிடம் இருந்த தங்கச் செயினை பறித்து கொண்டு தர்மாவை விட்டு சென்றனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிய தர்மா தன்னை கொலை செய்ய திட்டமிட்டது யார் என்று தெரியாமல் தினந்தோறும் ஆலோசித்து இறுதியாக இந்த மாதம் 11ம் தேதி கம்மம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பிறகு வழக்குப் பதிவு செய்த நகர காவல் உதவி ஆணையர் ரமண மூர்த்தியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது உண்மை தெரிய வந்தது. இந்த நிலையில் கானாபுரம் ஹவேலி இன்ஸ்பெக்டர் பானு பிரகாஷ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தர்மா மனைவியில் கள்ளக்காதலன் சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமாஞ்சநேயுலு, பருகுடேம் கிராமத்தைச் சேர்ந்த தண்ட வெங்கட ரமணனிடம், ரவுடி பகதலா விஜய் குமார் உள்ளிட்டோர் கம்மம் நகரில் உள்ள செருகுரி மாம்பழத் தோட்டத்தில் இருப்பதாகக் தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். தோட்டத்தில் இருந்த ராமாஞ்சநேயுலு, வெங்கட நாராயணா, விஜய் குமார், வெமுலா கிருஷ்ணா, புரி விஜய் ஆகியோரை கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து தர்மாவை கடத்த பயன்படுத்திய இரண்டு கத்திகள், ஒரு துப்பாக்கி, ரூ.90 ஆயிரம் பணம், ஒரு கார் , 5 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.