4 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

 
vote

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியையும் அறிவித்துள்ளது. 

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நடப்பு மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். 

election commision

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். 100 வயதுக்கு மேல் நாட்டில் 1.02 லட்சம் வாக்களர்கள் உள்ளனர். ஏப்ரல் 01ம் தேதி 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க் தகுதி. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மே 13ம் தேதி நடைபெறவுள்ளது. அருணாச்சலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏபரல் 19ம் தேதியும் நடைபெறவுள்ளது. ஒடிசாவில் 4 கட்டங்களாக மே 13, மே 20, மே 25, ஜூன் 01 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.