மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்!!

 
tn

மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Parliament

கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல் நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர்  தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்ட தொடரில் எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு , ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.  அத்துடன் மத்தியில்  ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை   எதிர்த்து தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்ட நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முடங்கியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் ,ஜோதிமணி ,ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என். பிரதாபன் ஆகியோர் அவைத்தலைவர் இருக்கை முன்பு நேற்று அமலில் ஈடுபட்டனர்.  இது தொடர்பாக அவர்கள் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து முழுவதுமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

tn

இந்நிலையில் மாநிலங்களவையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பிய தி.மு.க எம்.பி.க்கள் 4 பேர் உட்பட 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.திமுக எம்.பி.க்கள் 4 பேர் உட்பட 11 எம்பிக்களை இடைநீக்கம் செய்து மாநிலங்களவை துணைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். திமுக எம்.பி.க்கள் கனிமொழி,  என்.ஆர். இளங்கோ , கிரிராஜன் , என்.வி.என்.சோமு ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் நான்கு பேர் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.