திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தாயான பெண் 15 வயது சிறுவனுடன் தகாத உறவு!

 
பெண்

ஆந்திர மாநிலம்கிருஷ்ணா மாவட்டம் குடிவாடாவில் திருமணமாகி 4 குழந்தைகள் பெற்ற இளம் பெண் 15 வயது சிறுவனுடம் தகாத உறவு வைத்து ஊரை விட்டு ஓடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா  குட்மேன் பேட்டையை சேர்ந்த திருமணமான ஸ்வப்னா (30) என்பவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளதால் அவரது குழந்தைகளுடன் வேறு இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் ஸ்வப்னா தான் குடியிருந்த வீட்டின் எதிரில் இருந்த 15 வயது சிறுவனிடம் பழகி வந்துள்ளார். ஆன்ட்டி ஆன்ட்டி என அடிக்கடி வீட்டிற்கு வரும் எட்டாம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுவனிடம் ஆபாச வீடியோக்கள்  காண்பித்து  மைனர் சிறுவனுடன்  உடலுறவில் இருந்துள்ளார்.  

பல மாதங்களாக இது தொடர்ந்து வந்துள்ள நிலையில் மைனர் சிறுவனிடம் எனது கணவர் குழந்தைகளை நான் விட்டு வந்து விடுகிறேன். நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என சிறுவனுக்கு மூளை சலவை செய்து இம்மாதம் 19ம் தேதி மைனர் சிறுவனுடன் ஸ்வப்னா ஹைதராபாத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.  இந்நிலையில், சிறுவனின் தந்தை கடந்த திங்கட்கிழமை சிறுவன் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். மைனர் சிறுவன் அவ்வபோது ஸ்வப்னாவின் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரும்  காணாமல் போனதால் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் ஸ்வப்னா போன் எண் ஆதாரமாக போலீசார் விசாரணை தொடங்கினர். இதில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் ஸ்வப்னா  மைனர் சிறுவனுடம் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர்  ஐதராபாத்தில் இருந்து கைது செய்து குடிவாடாவுக்கு அழைத்து வந்தனர். ஸ்வப்னாவை புதன்கிழமை குடிவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றம் உத்தரவுப்படி சிறையில் அடைத்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.