25 வயதில் கர்நாடக ஐகோர்ட் நீதிபதியாகும் தலித் பெண்

 
க்

தலித் சமூகத்தைச் சேர்ந்த 25 வயதே ஆன இளம் பெண் ஒருவர் கர்நாடக உயர்நீதிமன்ற  சிவில் நீதிபதியாக பதவியேற்கிறார்.  அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நேரடி தேர்வு நடந்தது.   இந்த தேர்வில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பங்காருபேட்டையைச் சேர்ந்த காயத்ரி என்கிற 25 வயது இளம்பெண் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளார். 

க்ஹ்

 சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.   அதில் பங்காருபேட்டையைச் சேர்ந்த காயத்ரி தேர்ச்சி பெற்றுள்ளார்.  அடுத்து விரைவில் அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார்.

 இந்த இளம் வயதிலேயே சிவில் நீதிபதியாக தேர்வாகி இருக்கும் காயத்ரி,  பங்காருபேட்டை அடுத்த காரஹள்ளி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் தான் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார்.   கோலார் தங்க வயதில் உள்ள கெங்கல் அனுமந்தையா சட்ட கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்துள்ளார்.  பல்கலைக்கழக அளவில் நாலாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

 தலித் சமூகத்தைச் சேர்ந்த காயத்ரி கடின உழைப்பால் இன்றைக்கு சிவில் நீதிபதியாக தேர்வாகி இருக்கிறார் என்று சொல்லி அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.