இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 228 பேருக்கு கொரோனா

 
Covid india

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 228- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதன் காரணமாக இந்தியாவிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 288- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 4 உயிரிழப்புகள் பதிவாகியிருக்கின்றன. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.01 ஆகவும் கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 98.80 சதவிகிதமாகவும் உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,503- ஆக உள்ளது.