களத்தில் குதித்து கபடி ஆடிய நடிகை ரோஜா

 

களத்தில் குதித்து கபடி ஆடிய நடிகை ரோஜா

தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக இருந்தபோதே, நடிகை ரோஜா தனது பிறந்த மண் ஆந்திர அரசியலில் தீவிரமாக இருந்து வந்தார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்துகொண்ட பின்னர், சினிமாவை விட்டு விலகி, முழு நேர அரசியலுக்கு சென்றார். ஒய்.எஸ்.ஆர்.காஙிரஸி கட்சி சார்பாக நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

களத்தில் குதித்து கபடி ஆடிய நடிகை ரோஜா

எம்.எல்.ஏதான் என்றாலும் ஆந்திர சட்டமன்றத்தில் முக்கியமானவராக இருக்கிறார்.

களத்தில் குதித்து கபடி ஆடிய நடிகை ரோஜா

அவர் தனது தொகுதியான நகரியில் நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்தார். அப்போது, கபடி வீரர்களும் ரசிர்களும் அவரை ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

களத்தில் குதித்து கபடி ஆடிய நடிகை ரோஜா

வரவேற்பின் உற்சாகத்தில் இருந்த ரோஜா, திடீரென களத்தில் இறங்கி தானும் கபடி ஆட ஆரம்பித்துவிட்டார். சுற்றி நின்றிருந்த மக்கள் கைதட்டி, விசில் அடித்து உற்சாகம் கொடுக்க, தொடர்ந்து ரொம்ப நேரம் கபடி ஆடினார் ரோஜா.

ரோஜாவின் இந்த கபடியாட்டம் வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.