சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 99 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் தொடங்கியது. பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. ஆனால் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் சிறிய உயர்வுடன் பங்கு வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், விப்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

விப்ரோ

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,876  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,616  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 119 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.40 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.94 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்களை கை விடாத பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம்….

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 98.84 புள்ளிகள் உயர்ந்து 61,872.62 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 35.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,321.15 புள்ளிகளில் முடிவுற்றது.