பங்குச் சந்தையில் ரூ.2.48 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 709 புள்ளிகள் வீழ்ச்சி

 

பங்குச் சந்தையில் ரூ.2.48 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 709 புள்ளிகள் வீழ்ச்சி

அமெரிக்க பெடரல் வங்கி இந்த ஆண்டு இறுதி வரை அல்லது பொருளாதாரம் வலுவான மீட்சியை காட்டும் வரை வட்டி விகிதத்தை 0.00 முதல் 0.25 சதவீதமாக தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்துள்ளது. மேலும் 2022 வரை வட்டி விகிதத்தை பெடரல் வங்கி உயர்த்தாது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிவு கண்டது. இது போன்ற பல காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது.

பங்குச் சந்தையில் ரூ.2.48 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 709 புள்ளிகள் வீழ்ச்சி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, நெஸ்லே இந்தியா, பவர் கிரிட், ஹீரோமோட்டோகார்ப் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஸ்டேட் வங்கி, சன்பார்மா, மாருதி, பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா ஸ்டீல் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தையில் ரூ.2.48 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 709 புள்ளிகள் வீழ்ச்சி

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,017 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,534 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.133.15 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று ஒரே நாளில் பங்குச் சந்தையால் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.48 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்குச் சந்தையில் ரூ.2.48 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 709 புள்ளிகள் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 708.68 புள்ளிகள் குறைந்து 33,538.37 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 214.15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,902.00 புள்ளிகளில் முடிவுற்றது.