விஷவாயு தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு - போலீஸ் எச்சரிக்கை
Jun 11, 2024, 10:42 IST1718082775589
![tt](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/bc7ef62d30cb536af493ca62a322ccca.png)
வீடுகளில் இருந்து விஷவாயு வெளியேறிய நிலையில் 2 பெண்கள் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரியில் புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியான விஷவாயு வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறுவதாக புகார் எழுந்துள்ளது.
வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறும், வீட்டில் இருப்பவர்கள் முகக்கவசம் அணியுமாறும் ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை அறிவித்துள்ளது. புதுநகரைச் சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.