பிரஜ்வால் ரேவண்ணா மீது மேலும் 2 வழக்கு

 
dd

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா  பாலியல் புகாரில் சிக்கினார். இதுதொடர்பாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக  சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றார். இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அத்துடன்  சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணா சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில் பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்திற்கு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைதாகியுள்ளார்.

f


இந்நிலையில் ஆபாச வீடியோ புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.   சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு சற்று நேரத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளது. 

ff

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவல் கிடைக்கும் பட்சத்தில் பிரஜ்வால் ரேவண்ணாவை ஹாசனில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.