‘கிசான் கா ராவணன்’ முழக்கத்துடன் மோடி உருவத்தை எரிக்கும் மக்கள்!

 

‘கிசான் கா ராவணன்’ முழக்கத்துடன்  மோடி உருவத்தை எரிக்கும் மக்கள்!

தசரா பண்டிகையின் போது ராவணன் உருவ பொம்மையை எரிப்பதுதான் வழக்கம். ஆனால், ராவணனுக்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபதிர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளை எரித்தனர் விவசாயிகள்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த புதிய வேளான் சட்டங்களால் அம்பானி, அதானி போன்றோர்தான் லாபம் அடைவார்கள் என்றும் விவசாயிகள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தசரா பண்டிகையின் போது ராவணனை எரிப்பதற்கு பதிலாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மற்றும் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளை எரித்து விவசாயிகள் தங்கள் எதிர்ப்பினை காட்டினார்.

‘கிசான் கா ராவணன்’ என்ற முழக்கத்துடன் மோடி உருவத்திற்கு தீ வைத்து எரித்தனர்.

இதை பலர் வீடியோ எடுத்து இணையங்களிலும் பதிவிட்டுள்ளனர். அவை வைரலாகி வருகின்றன.