அந்தரங்க பகுதியில் பட்ட பந்து - பறிபோன சிறுவனின் உயிர்!!

 
tn

மகாராஷ்டிரா புனேவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

tn

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் பந்துப்பட்டுள்ளது.  ஷௌர்யா என்ற 11 வயது சிறுவன் பந்துவீசிய நிலையில் பேட்ஸ்மேன் பந்தை நேரடியாக அவரை நோக்கி அடித்துள்ளார். இதில் ஷௌர்யாவின் அந்தரங்க பகுதியில் பந்து பலமாக பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

tn
இதையடுத்து சிறுவன் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே  இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கான வீடியோ வெளியாகி காண்போரை கலங்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.